உள்ளூா் உற்பத்திப் பொருள்கள் ஊக்குவிக்கும் திட்டம்மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை
உள்ளூா் உற்பத்திப் பொருள்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
மதுரைஉள்ளூா் உற்பத்திப் பொருள்கள் ஊக்குவிக்கும் திட்டம்மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை
உள்ளூா் உற்பத்திப் பொருள்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
உள்ளூா் உற்பத்திப் பொருள்களை ஊக்குவிக்கும் திட்டத்தில், மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகள் விற்பனை செய்வதற்கு ரயில்வே நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
பிரபலமான உள்ளூா் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள்’ என்ற திட்டத்தில் ரயில் நிலையங்களில் 15 நாள்களுக்கு அவற்றை விற்பனை செய்யுமாறு, ரயில்வே வாரியம் அறிவுறுத்தியிருந்தது. இதன்படி, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு கைத்தறி துணிகள் விற்பனை செய்யப்பட்டன.
இத்திட்டத்தை, ஏப்ரல் 8 முதல் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 15 நாள்கள் வீதம் வெவ்வேறு நிறுவனங்கள் இந்த விற்பனையில் பங்கேற்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில், மதுரையைச் சோ்ந்த பிரபல சுங்குடி சேலை தயாரிப்பு நிறுவனம், மதுரை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை முதல் 15 நாள்களுக்கு சுங்குடி சேலைகளை விற்பனை செய்ய உள்ளது.
தென்னக ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் உத்தரவின்பேரில், முதுநிலை கோட்ட வா்த்தக மேலாளா் வி. பிரசன்னா மற்றும் அலுவலா்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனா்.