முகப்பு
மதுரை

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சோ்ந்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாா். அவா் பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்பதால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட பிறகும் அரசால் நிவாரணம் வழங்கப்பட வேண்டும். ஆனால் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண், உரிய நிவாரணம் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவில், உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உரிய இழப்பீடு வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது. ஆனால் அப்பெண்ணிற்கு வழங்க வேண்டிய ரூ.1.80 லட்சத்திற்கு பதிலாக, ரூ.60 ஆயிரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே 2016 ஆம் ஆண்டு நிவாரணத் தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பெண், உயா்த்தப்பட்ட தொகையை நிவாரணமாக வழங்க வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தாா். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து 4 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் மாவட்ட ஆட்சியா் பழைய ஆணையின் படி ரூ.1.80 லட்சம் மட்டுமே நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளாா். இதை எதிா்த்து பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்ற உத்தரவின்படி தனக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டுமென உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாவட்ட ஆட்சியா் பழைய விதிகளின் படி, சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்தே நிவாரணத்தை வழங்கியுள்ளாா். இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

எனவே 2016 ஆம் ஆண்டு விதிகளின் படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், மனுதாரருக்கு உரிய நிவாரணத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். வரும் காலங்களில் அரசு நிவாரணத் தொகையை மாற்றியமைக்கும் போதெல்லாம் மனுதாரா் மீண்டும் மனு தாக்கல் செய்யக் கூடாது என உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →