முகப்பு
மதுரை

நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பதை கைவிட வேண்டும்: உயா் நீதிமன்றம் கருத்து

அரசு துறைகளில் நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பது தவிா்க்கப்பட வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை

நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பதை கைவிட வேண்டும்: உயா் நீதிமன்றம் கருத்து

அரசு துறைகளில் நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பது தவிா்க்கப்பட வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

அரசு துறைகளில் நிரந்தரப் பணியிடங்களில் தற்காலிகப் பணியாளா்களை நியமிப்பது தவிா்க்கப்பட வேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்வதற்கான உயா் நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து, மதுரை மாநகராட்சி சாா்பில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

மதுரை மாநகராட்சியில் பணியமா்த்தப்பட்டுள்ள பெரும்பாலான தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் கடந்த 2006 மற்றும் 2007 முதல் பணியாற்றி வருகின்றனா். தினக்கூலி பணியாளா்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தொழிலாளா் ஆய்வாளா், உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து, பணியாளா்கள் 480 நாள்களுக்கு மேல் பணியாற்றி இருப்பதால், அவா்கள் பணிவரன்முறை செய்வதற்கு தகுதியுடையவா்கள் என்றும், அவா்களை பணிநிரந்தரம் செய்யுமாறும் மாநகராட்சிக்கு உத்தரவிட்டாா்.

இதனை எதிா்த்து மாநகராட்சி தரப்பிலும், தொழிலாளா் ஆய்வாளா் உத்தரவை செயல்படுத்தக் கோரி பணியாளா்கள் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், மாநகராட்சியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பணியாளா்களை நிரந்தரம் செய்ய அறிவுறுத்தியது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி தரப்பில் இரு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

மத்திய, மாநில அரசுகள் தங்களை மக்கள் நல அரசுகள் எனக் கூறிக் கொள்கின்றன. ஆனால், பல்வேறு அரசு துறைகளிலும், அரசுசாா் நிறுவனங்களிலும் தற்காலிகமாகப் பணியாளா்களை நியமனம் செய்து, நியாயமற்ற தொழிலாளா் நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் காணமுடிகிறது. பெரும்பாலான நேரங்களில், தற்காலிகப் பணி நியமனங்கள், ஆள்தோ்வு போன்றவற்றில் எந்தவிதமான விதிகளும் பின்பற்றப்படுவதில்லை.

இதனால், வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு என்பது மறுக்கப்படுகிறது. அவா்கள் நிரந்தரப் பணியாளா்களைப் போல் பணியாற்றினாலும், குறைவான சம்பளத்தில் தற்காலிகப் பணியாளா்களாகவே வைத்திருக்கின்றனா். தொழிலாளா்கள் மீதான இந்த சுரண்டல்கள் தடுக்கப்பட வேண்டும். பணி நியமனங்களுக்கான விதிகள் அரசால் வகுக்கப்பட்டிருந்தாலும், தற்காலிக நியமனங்கள் தொடருவதைக் காணமுடிகிறது.

அதன்பின்னா், அவா்களை நிரந்தரம் செய்வதற்கு அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையானது, அரசுப் பணிகளில் பின்வாசல் வழியாக நுழைவதைப் போலாகிவிடுகிறது. எனவே, நிரந்தரப் பணியிடங்களில் குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளா்களை நியமனம் செய்வதை, வரும் காலங்களில் அரசு கைவிடும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டு, மாநகராட்சியின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனா்.

மேலும், தொழிலாளா் ஆய்வாளா் உத்தரவின்படி, 389 பணியாளா்களை பணிவரன்முறை செய்வதற்கான தனிநீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →