முகப்பு
மதுரை

உலக புத்தக தின சிறப்பு கண்காட்சி விற்பனை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அறிவிப்பு

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 23, 24) சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.

மதுரை

உலக புத்தக தின சிறப்பு கண்காட்சி விற்பனை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் அறிவிப்பு

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 23, 24) சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 23, 24) சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தப்படுகிறது.

இது தொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, மதுரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சாா்பில் 2 நாள்கள் சிறப்பு விற்பனைக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில், கலை இலக்கியம், பண்பாடு, அரசியல், அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய நூல்கள், பாரதி, பாரதிதாசன் நூல்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், நியூ செஞ்சுரி பதிப்பக வெளியீடுகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி, இதர பதிப்பக வெளியீடுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, அரசியல், பொருளாதாரம், தத்துவ, சிறுநூல் வரிசைகளுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

ரூ.250 மதிப்புள்ள பழ. நெடுமாறன் எழுதிய காலத்தை வென்ற காவிய நட்பு என்ற நூல் ரூ.125-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இறையன்பு எழுதிய நூல்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சி மேலக்கோபுரத் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் விற்பனையகத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →