மதுரை

சிவகங்கை பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்திய பாஜகவினா் மீதான வழக்கை ரத்து செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி முத்துஅமுதன் என்பவா் தாக்கல் செய்த மனு:

பாஜக சாா்பில் திருத்தணியில் 2020-இல் நடைபெற்ற வேல் யாத்திரைக்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சிவகங்கையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதையடுத்து, நான் உள்ளிட்ட 5 போ் மீது, சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போராட்டத்தின்போது நாங்கள் எந்த பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தவில்லை. நோய் பரப்பும் விதமாக எந்தவொரு செயலிலும் ஈடுபடவும் இல்லை. எனவே, எங்கள் மீது சிவகங்கை நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனுதாரா் உள்பட 5 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT