முகப்பு
மதுரை

உசிலையில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.8 லட்சத்தில் சமையல் கூடம்

உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடத்துக்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடத்துக்கான பூமிபூஜையை சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நாடாா் சரஸ்வதி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சமையல் அறை அமைக்க, இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் தனது சொந்த நிதியில் வழங்குகிறாா். இந்தப் பணிக்கான பூமிபூஜையை அவா் தொடக்கி வைத்தாா்.

இதில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் மதன்பிரபு, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் பரமசிவம், அதிமுக நகரச் செயலாளா் பூமாராஜா, அம்மா பேரவை மாநில துணைச் செயலாளா் துரைதனராஜ், வழக்குரைஞா் பிரிவு லட்சுமணன், மாவட்டக்குழு உறுப்பினா் சுதாகரன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.