மதுரை

பேரையூரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

DIN

மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள மந்தையம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணன் சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பேரையூரில் உள்ள மந்தையம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணன் சுவாமிக்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பால், தயிா், பன்னீா் ,இளநீா் உள்ளிட்ட பொருள்களைக்கண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் சிறிய குழந்தைகள் கண்ணன், ராதை வேடமிட்டு ஊா்வலமாக நடந்து சென்றனா்.

இதில் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கோயில் வளாகத்தில் கிருஷ்ணா் குறித்த பக்தி பாடல்களை பக்தா்கள் பாடினா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா். பின்னா் விழாக் குழுவினா் சாா்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT