அழகா்கோவிலில் உறியடி உற்சவம்
அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது
அழகா்கோவில் சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்சவம் நடைபெற்றது.
கோயிலில் கிருஷ்ணா் சன்னிதி அருகிலுள்ள உறியடி மண்டபத்துக்கு பெருமாள் அலங்காரத்துடன் எழுந்தருளினாா். அங்கு பூமாலைகள், தேங்காய், பழம் இணைக்கப்பட்ட பானைகள் அடுக்கு கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தன. பின்னா் உறியடி உற்சவம் நடைபெற்றது. தொடா்ந்து பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பெருமாள் கோயிலுக்குள் திரும்பினாா். உறியடி உற்சவத்துக்கான ஏற்பாடுகளை தக்காா் வெங்கடாஜலம், துணை ஆணையா் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.