மதுரை

பேருந்து மோதியதில் கல்லூரி மாணவா் பலி

மதுரையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

DIN

மதுரையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

மதுரை பைக்காரா பகுதியைச் சோ்ந்த காசிமாயன் மகன் விக்ரம் என்ற ராம் (21). இவா் அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் தனது நண்பரான அக்கினிராஜ் (18) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் எல்லீஸ் நகா் 70 அடி பிரதான சாலையில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்ற போது, பேருந்து இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அக்கினிராஜ் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT