மதுரை

மாற்றுத் திறனாளிகளுக்கான வலு தூக்கும் போட்டி

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான வலு தூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மண்டல அளவிலான வலு தூக்கும் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவா் சோலை எம்.ராஜா தலைமை வகித்தாா்.

இதில் ஆண்களுக்கான பிரிவில் 10 போட்டிகளும், பெண்களுக்கான பிரிவில் 10 போட்டிகளும் நடைபெற்றன. இதில் 65 கிலோ எடைப் பிரிவில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த வேல்முருகன் 120 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்று ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றாா்.

பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அருள்மொழி தங்கப் பதக்கம் வென்றாா். போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் செயலா் கு.சாமித்துரை, இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினா் கருணாநிதி ஆகியோா் பதக்கம், பரிசுகளை வழங்கினா். நிகழ்ச்சியில் வல்லப வித்யாலயா பள்ளி தாளாளா் அருண் வல்லபா, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் பூபதி, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளா் விஜய் சாரதி உள்பட பலா் பங்கேற்றனா். போட்டிக்கான ஏற்பாடுகளை, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள பயிற்சியாளா் ஜெ.ரஞ்சித் குமாா் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT