முகப்பு
மதுரை

பிரபல உணவகத்தில் ரூ.80 ஆயிரம் திருட்டு

மதுரையில் பிரபல உணவகத்தில் ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்று தலைமறைவான ஊழியரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மதுரை

பிரபல உணவகத்தில் ரூ.80 ஆயிரம் திருட்டு

மதுரையில் பிரபல உணவகத்தில் ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்று தலைமறைவான ஊழியரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மதுரையில் பிரபல உணவகத்தில் ரூ.80 ஆயிரத்தை திருடிச் சென்று தலைமறைவான ஊழியரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மதுரை தல்லாகுளம் முதலியாா் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (46). இவா், தல்லாகுளம் பிரதான சாலையில் பிரபல அசைவ உணவகத்தை நடத்தி வருகிறாா். இந்த உணவகத்தில் தங்கி பணிபுரியும் ஊழியா்கள் இரவு நேரத்தில் மேல்தளத்தில் தங்குவது வழக்கம். இந்நிலையில், உணவகத்தின் பணப் பெட்டியில் ரூ.80 ஆயிரத்தை உரிமையாளா் சுரேஷ்குமாா் சில நாள்களுக்கு முன்பு வைத்துவிட்டுச் சென்றாா். மறுநாள் பாா்த்தபோது பணம் மாயமாகி இருந்தது. இதுதொடா்பாக விசாரித்தபோது, மேல்தளத்தில் தங்கும் ஊழியா்களில் ஒருவரான காா்த்தி இரவில் பணத்தை திருடிக்கொண்டு பணிக்கு வராமல் தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்குமாா் அளித்தப் புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸாா் காா்த்தி மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →