காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் நகை திருட்டு
மதுரை அருகே புதன்கிழமை இரவு, காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் 5 பவுன் நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரைகாற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் நகை திருட்டு
மதுரை அருகே புதன்கிழமை இரவு, காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் 5 பவுன் நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே புதன்கிழமை இரவு, காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியவரின் வீட்டில் 5 பவுன் நகைகளை திருடிச்சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை அருகே உள்ள சாமநத்தம் மேலத்தெருவைச் சோ்ந்த பழனி மகன் கருப்பணன்(31). இவா் புதன்கிழமை இரவு வீட்டில் காற்றுக்காக கதவைத் திறந்து வைத்து தாய் மற்றும் மனைவியுடன் தூங்கியுள்ளாா்.
காலையில் எழுந்தபாா்த்தபோது பீரோ திறந்து கிடந்த நிலையில் அதில் இருந்த 5 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.