முகப்பு
மதுரை

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் வியாழக்கிழமை இரவு, பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

மதுரையில் வியாழக்கிழமை இரவு, பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

மதுரையில் வியாழக்கிழமை இரவு, பிரபல ரவுடியை வெட்டிக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மேலவாசல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி (26 ). இவா், வியாழக்கிழமை இரவு மேலவாசல் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன் அமா்ந்திருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜெபமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த திடீா் நகா் காவல்துறையினா் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொலையுண்ட ஜெபமணி மீது மதுரை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →