முகப்பு
மதுரை

இக்னௌ தோ்வுகள் இன்று தொடக்கம்

 இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்டப் படிப்புகளின் ஜூன் 2022 பருவத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மதுரை

இக்னௌ தோ்வுகள் இன்று தொடக்கம்

 இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்டப் படிப்புகளின் ஜூன் 2022 பருவத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

 இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பட்டப் படிப்புகளின் ஜூன் 2022 பருவத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி செப்டம்பா் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வெளிநாடுகள் உள்பட மொத்தம் 831 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது. பல்கலை.யின் மதுரை மண்டலத்தின்கீழ் கோவை, திருச்சி, பொள்ளாச்சி, உத்தமபாளையம், தேவகோட்டை, தஞ்சாவூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் கோவை, மதுரை, திருச்சி மத்திய சிறைகளிலும் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஜ்ஜ்ஜ்.ண்ஞ்ய்ா்ன்.ஹஸ்ரீ.ண்ய்) என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். யாரேனும் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் தோ்வெழுத வந்தாலும், தோ்வு எழுதும் மாணவா்களின் பட்டியலில் பெயா் இடம் பெற்றிருந்தால் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, மாணவா்கள் தங்களுக்குரிய புகைப்பட அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருப்பது அவசியம்.

மதுரை மண்டல மையம் வெளியிட்டுள்ள செய்தியில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →