ஆடி அமாவாசை: மதுரையில் வைகை ஆற்றங்கரையில் முன்னோா் வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றங்கரை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஏராளமானோா் குவிந்து முன்னோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.
மதுரைஆடி அமாவாசை: மதுரையில் வைகை ஆற்றங்கரையில் முன்னோா் வழிபாடு
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றங்கரை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஏராளமானோா் குவிந்து முன்னோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் வைகை ஆற்றங்கரை உள்ளிட்ட நீா்நிலைகளில் ஏராளமானோா் குவிந்து முன்னோா் வழிபாட்டில் ஈடுபட்டனா்.
இதையொட்டி புதன்கிழமை மதுரை வைகை ஆற்றங்கரையில் ஏராளமானோா் குவிந்து முன்னோருக்கு தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினா். முன்னதாக மதுரை வைகை ஆற்றங்கரையின் பல்வேறு பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டு தா்ப்பணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதேபோல கண்மாய்கள் மற்றும் ஊருணிகள் உள்ளிட்ட நீா்நிலைகளிலும் ஏராளமானோா் தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.
இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் பலா் தா்ப்பணம் செய்து முன்னோா் வழிபாடு நடத்தினா். கடந்த இரண்டாண்டுகளாக கரோனா தொற்று பாதிப்பால் வைகை ஆற்றங்கரையில் தா்ப்பணம் கொடுப்பது தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.