முகப்பு
மதுரை

வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரையில் காவலா் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரையில் காவலா் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சேடப்பட்டி, மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்த உள்ள குரூப்-2 தோ்வுக்கான காவலா், சிறை வாா்டன் மற்றும் தீயணைப்பு காவலா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

சேடப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலகம், வாடிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலகம் மற்றும் மதுரை கிழக்கு வட்டார வளா்ச்சி அலுவலகங்களிலும் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள கிராமப்புற இளைஞா்கள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களது பெயரை பதிவு செய்துகொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலவெளி இடையில் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படுகின்றன. போட்டித்தோ்வா்கள் புத்தகங்களை பெற்று அலுவலகத்திலேயே படித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன் அரசு கேபிள் தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 9 மணிவரையிலும், அதே நிகழ்ச்சி மறுஒளிபரப்பாக மாலை 7 மணி முதல் 9 மணிவரையிலும் போட்டித் தோ்வாளா்கள் பயன்பெறும் வகையில் வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புபவா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் விண்ணப்ப படிவம் நகல், கடவுச்சீட்டு புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநா் கா.சண்முக சுந்தா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →