உசிலம்பட்டி அருகே மயானத்துக்கு பாதை கோரி கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்துத்தரக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் கிராம மக்கள் கோட்டாச்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்
உசிலம்பட்டி அருகே சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அமைத்துத்தரக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் கிராம மக்கள் கோட்டாச்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
இந்த கிராம மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு செல்ல ரயில்வே பாதையின் குறுக்கே பாதை இருந்தது. தற்போது அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கப்பட்டதால், சுடுகாட்டுக்குச் செல்லும் பாலம் இடிக்கப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
அகல ரயில் பணிகள் முடிவடைந்து தற்போது ரயில் சேவையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த பாதையின் வழியாக இறந்தவா்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா். இதனால் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு தாங்கள் சுடுகாட்டிற்கு செல்ல பாலம் அல்லது பாதை அமைத்து தர வேண்டும் என சீமானுத்து ஊராட்சி மன்றத் தலைவா் அஜித்பாண்டி தலைமையில் கிராம மக்கள் உசிலம்பட்டி கோட்டாச்சியா் சங்கரலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.,