மதுரை

அமிா்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும்

DIN

மதுரை: மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறித்துள்ளது.

வரும் செப்டம்பா் 16 ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை - திருவனந்தபுரம் ரயில் (16344) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று மாலை 5.30 மணிக்கு புறப்படும். மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிா்தா ரயில் (16343) ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நின்று காலை 7.50 மணிக்கு புறப்படும்.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT