நெல்லை கல்குவாரி உரிமையாளா் மகனுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு
குவாரி நிலத்தின் உரிமையாளரின் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை, உத்தரவிட்டுள்ளது.
மதுரைநெல்லை கல்குவாரி உரிமையாளா் மகனுக்கு ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு
குவாரி நிலத்தின் உரிமையாளரின் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை, உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடா்பாக, குவாரி நிலத்தின் உரிமையாளரின் மகனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை, உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முன்னீா்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில், பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 போ் உயிரிழந்தனா். இந்த வழக்கில் கைதானவா்களில், குவாரி நிலத்தின் உரிமையாளரான செல்வராஜின் மகன் குமாா், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை புதன்கிழமை, விசாரித்த நீதிபதி ஜி.இளங்கோவன், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் செல்வராஜுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் மனுதாரருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டாா். மேலும், மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலையில் முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.