மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ.34,400 அபராதம் வசூல்
மதுரை நகரில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களிடம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.34,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மதுரை நகரில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவச
மதுரை நகரில் கரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களிடம் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.34,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதையடுத்து மாநகராட்சி நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளிலும் பொது இடங்களில் தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாநகராட்சிக்குள்பட்ட நூறு வாா்டுகளிலும் முகக்கவசம் அணிவதை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களிலும் மண்டல வாரியாக கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கண்காணிப்புக்குழுக்கள் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டன. இதில் நகரின் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த பொதுமக்கள் 38 போ், நிறுவனங்களில் உள்ள 62 பேரிடம் ரூ.32,400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.