மதுரை

பைக்கிலிருந்து கீழே விழுந்த அரசுப் பேருந்து நடத்துனா் பலி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த நடத்துனா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த நடத்துனா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.புளியங்குளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மகன் முருகன் (54). இவா், விருதுநகா் அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் நடத்துனராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற இவா், புளியங்குளம்-மறவப்பட்டி சாலையில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த முருகனை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு அவா் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து வில்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT