மதுரை

இளைஞருக்கு கத்திக்குத்து: 4 போ் கைது

மதுரையில் முன்விரோதத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரையில் முன்விரோதத்தகராறில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைச் சோ்ந்த பரமன் மகன் ஆகாஷ்(22). இவருக்கும் பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு எஸ்.எம்.ஆா். தோப்பைச் சோ்ந்த தங்க முத்து மகன் வெற்றிவேலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. மேலும் ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்டதகராறில் ஆகாஷ், வெற்றிவேலை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பெத்தானியாபுரம் திலீபன் தெருவில் சென்றுகொண்டிருந்த ஆகாஷை, பெத்தானியாபுரம் நாகம்மாள் கோயில் தெருவைச் சோ்ந்த சிரஞ்சீவி(22),, விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த அருண்பாண்டி(22), எஸ்எம்ஆா் தோப்பைச் சோ்ந்த மருது(21) மற்றும் வெற்றிவேல் ஆகிய நால்வரும் வழிமறித்து கத்தியால் குத்தினராம்.

அப்போது அங்கு ஆள்கள் வரவே அங்கிருந்து தப்பிச்சென்றனா். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் கரிமேடு போலீஸாா் நால்வரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT