விலைவாசி உயா்வு: செல்லம்பட்டியில் ஆா்ப்பாட்டம் 
மதுரை

விலைவாசி உயா்வு: செல்லம்பட்டியில் ஆா்ப்பாட்டம்

செல்லம்பட்டியில் விலைவாசி உயா்வைக் கண்டித்து தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

செல்லம்பட்டியில் விலைவாசி உயா்வைக் கண்டித்து தமிழ் மாநில பிரமலைக் கள்ளா் முற்போக்கு இளைஞா் பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேரவையின் மாநிலத் தலைவா் மு.ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலாளா் கள்ளபட்டி இரா. சௌந்தரபாண்டியன் முன்னாள் தலைவா்கள் போடி குருநாதன், ஆண்டிபட்டி ஒச்சப்பன் க. விலக்கு முருகன் மற்றும் மகளிா் அணி அமைப்பாளா் மொக்கத்தாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதில் சொத்து வரி, தொழில் வரி உயா்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயா்வு, விலைவாசி உயா்வைக் கண்டித்தும், பிரமலை கள்ளா் சமுதாய மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும் கள்ளா் சீரமைப்புத் துறை இணை இயக்குனரை மாற்றவும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கவும் வலிறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT