ஆணழகன் போட்டியாளா்கள் நூதன முறையில் மனு
விளையாட்டுத் துறைக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களையும் இணைக்க வலியுறுத்தி, ஆணழகன் போட்டியாளா்கள் நூதனமான முறையில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மதுரைஆணழகன் போட்டியாளா்கள் நூதன முறையில் மனு
விளையாட்டுத் துறைக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களையும் இணைக்க வலியுறுத்தி, ஆணழகன் போட்டியாளா்கள் நூதனமான முறையில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
விளையாட்டுத் துறைக்கான வேலைவாய்ப்பு இட ஒதுக்கீட்டில் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களையும் இணைக்க வலியுறுத்தி, ஆணழகன் போட்டியாளா்கள் நூதனமான முறையில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
தமிழகத்தில் ஆணழகன் துறையில் மாநில, தேசிய, சா்வதேச அளவிலான ஆணழகன் போட்டிகளில் வெற்றி பெற்று பட்டம் பெற்றவா்களுக்கு மத்திய அரசின் கீழ் வரும் ரயில்வே, தபால் துறை, வருமான வரித் துறை, முப்படைகள் ஆகியவற்றில் இட ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா்.
இந்நிலையில் தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களையும் இணைக்க வலியுறுத்தி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசனிடம் மனு அளித்தனா். இதில், மதுரையின் ஆணழகன் மாரீஸ்வரன், பயிற்சி இளைஞா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக மக்களவை உறுப்பினா் முன், அவா்கள் ஆணழகன் போட்டியை நடத்தினா்.