மதுரை

தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை

DIN

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற தெப்பக்குளம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த இளம்பெண் வண்டியூா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீலேகா (39) என்பது தெரியவந்தது. இவரது கணவா் கடந்த 10 மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா். 2 குழந்தைகள் உள்ள நிலையில் விரக்தி அடைந்த ஸ்ரீலேகா தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டியின் சடலம் மீட்பு: அண்மையில் பெய்த பலத்த மழையின் காரணமாக வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, வைகை அணையிலிருந்து 7,500 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆரப்பாளையம் பகுதி வைகையாற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு சென்ற கரிமேடு போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த பெண்ணுக்கு சுமாா் 55 வயது இருக்கும் எனவும், இறந்தவா் யாா் என்று விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT