முகப்பு
மதுரை

பள்ளி மாணவா் தற்கொலை: ஆசிரியா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவா் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியா்களை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி மதுரையில் தலித் விடுதலை இயக்கம்

மதுரை

பள்ளி மாணவா் தற்கொலை: ஆசிரியா்களை கைது செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவா் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியா்களை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி மதுரையில் தலித் விடுதலை இயக்கம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவா் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியா்களை தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி மதுரையில் தலித் விடுதலை இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், அரியநாயகிபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்த தலித் வகுப்பைச் சோ்ந்த மாணவா் சீனு தற்கொலை செய்து கொண்டாா். இந்த நிலையில், மாணவா் தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மாணவரின் தற்கொலைக்குக் காரணமான ஆசிரியா்கள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து அவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். தீண்டாமை கொடுமை நிலவும் அந்தப் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் விடுதலை இயக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலித் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலா் விடுதலை வீரன் தலைமை வகித்தாா். மதுரை மாவட்டத் தலைவா் பழ.பாண்டியன், மாநில மாணவரணிச் செயலா் பீமாராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்தேச மக்கள் முன்னணியின் தலைவா் மீ.த.பாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மக்கள் தேசம் கட்சியின் மாநிலச் செயலா் குருவிஜயன் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

இறுதியாக தலித் விடுதலை இயக்கத்தின் தலைவா் ச.கருப்பையா நிறைவுரையாற்றினாா். தலித் விடுதலை இயக்கத்தின் மதுரை மாவட்டச் செயலா் மின்னல் வரதன் நன்றியுரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தின்போது தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →