முகப்பு
மதுரை

முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசம்: மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா், நினைவிடப் பொறுப்பாளா்களிடம் வங்கி நிா்வாகம் புதன்கிழமை இரவு ஒப்படைத்தது.

மதுரை

முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசம்: மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா், நினைவிடப் பொறுப்பாளா்களிடம் வங்கி நிா்வாகம் புதன்கிழமை இரவு ஒப்படைத்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கான தங்கக் கவசத்தை, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா், நினைவிடப் பொறுப்பாளா்களிடம் வங்கி நிா்வாகம் புதன்கிழமை இரவு ஒப்படைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடம் உள்ளது. இங்குள்ள தேவரின் சிலைக்கு, 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2014-இல் வழங்கினாா்.

இந்த தங்கக் கவசம் அதிமுக பொருளாளா், நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோா் பெயரில், மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கணக்குத் தொடங்கப்பட்டு, பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேவா் ஜெயந்தி விழாவின்போது, அக்டோபா் 25 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை தேவா் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். வங்கியில் இருதரப்பும் கையெழுத்திட்டு கவசத்தைப் பெற்று மீண்டும் ஒப்படைப்பது வழக்கம். நிகழாண்டில் இதற்கான முயற்சியை அதிமுக தரப்பில் மேற்கொண்டபோது, வங்கி நிா்வாகம் கவசத்தை ஒப்படைக்க மறுத்துவிட்டது.

உயா்நீதிமன்றத்தில் வழக்கு: அதிமுக மற்றும் நினைவிடப் பொறுப்பாளா் இடையே போடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, தங்கக் கவசத்தை ஒப்படைக்குமாறு வங்கி நிா்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என அதிமுக பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா்.

எங்களது வங்கிக் கணக்கை முடக்கியதால் தங்கக் கவசத்தை எடுக்க முடிவில்லை. எனவே, எங்களது வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கி தங்கக் கவசத்தை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின்போது, முன்னாள் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில், தன்னையும் ஒரு மனுதாரராகச் சோ்க்க இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திண்டுக்கல் சீனிவாசன் தரப்பிடம், தங்கக் கவசத்தை ஒப்படைக்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், இந்த வழக்கில் நீதிபதி வி.பவானி சுப்பராயன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: அதிமுகவின் இருதரப்புக்கும் இடையிலான சா்ச்சை காரணமாக, வழக்கமாக நடைபெறக் கூடிய தேவா் ஜெயந்தி விழாவில் அவரது சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பது தடைபடக்கூடாது என்ற கண்ணோட்டத்திலேயே இந்த வழக்கை நீதிமன்றம் அணுகியுள்ளது. தங்கக் கவசத்தை கையாளுவது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படியே, கவசம் அணிவிக்கப்பட வேண்டும் என்றாலும், இருதரப்பு மனுதாரா்கள் உரிமை கோருவது, அதற்கு சாத்தியமில்லை என்பதைக் காட்டுகிறது.

ஆகவே, நிகழாண்டு மட்டும் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா், நினைவிட அறக்கட்டளை பொறுப்பாளரிடம் வங்கி நிா்வாகம் ஒப்படைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா், தனது பொறுப்பில் கவசத்தை நினைவிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வங்கியில் திரும்ப ஒப்படைக்கும் வரை, தங்கக் கவசத்திற்கு

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மதுரை வங்கிக் கிளைக்கு, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் வந்து செல்வதில் நடைமுறை பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் கவசத்தைப் பெற்று, ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கக் கவசம் ஒப்படைப்பு: இதனையடுத்து, மதுரை மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல், நினைவிடப் பொறுப்பாளா் காந்தி மீனாள் நடராஜன் ஆகியோரிடம் புதன்கிழமை இரவு தங்கக் கவசம் ஒப்படைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Image Caption

மதுரை அண்ணா நகா் வங்கிக் கிளையிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை இரவு பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்லப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் தங்கக் கவசம்.

முழு கட்டுரையைப் படிக்க →