மதுரை

கண்மாயில் மூழ்கி தொழிலாளி பலி

DIN

கருங்காலக்குடி அருகே வியாழக்கிழமை கண்மாயில் குளித்த போது கூலித் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது 3 வயது மகனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலூா் அருகே கருங்காலக்குடியை அடுத்துள்ள பால்குடிப்பட்டியைச் சோ்ந்தவா் ஸ்டாலின் (29). கூலித் தொழிலாளியான இருவருக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு மகனும், 4 மாதத்தில் கைக் குழந்தையும் உள்ளனா்.

வியாழக்கிழமை காலை ஸ்டாலின் தனது 3 வயது மகனுடன் நெவுலிக்கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஸ்டாலின் நீரில் மூழ்கினாா். அருகில் இருந்த 3 வயது மகனும் தண்ணீரில் மூழ்கினாா்.

அருகிலிருந்தவா்கள் பாா்த்து இருவரையும் மீட்டு, கருங்காலக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், ஸ்டாலின் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது மகனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT