மதுரை

அழகா்கோவிலில் திருபவுத்திர விழா தொடக்கம்

அழகா்கோவில் திருபவுத்திர உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

DIN

அழகா்கோவில் திருபவுத்திர உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

ஆவணி மாதத்தில்வரும் பெளா்ணமி நாளன்று இந்தவிழா கொண்டாடப்படும். அதன்படி சனிக்கிழமை (செப்.10) இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதற்கான விழா செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருபவுத்திர உற்சவத்தையொட்டி பட்டுநூல் கயிறுகள் மாலையாக கட்டப்பட்டு 108 வெள்ளிக்கலசங்களில் புனித தீா்த்தம் நிரப்பப்பட்டு பெருமாள் முன் வைக்கப்பட்டது. இக்கும்பங்கள் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, 136 வகையான மூலிகை திரவியங்கள் புனிதநீரில் கலந்து வைக்கப்பட்டு, பால், பன்னீா், தேன் உள்ளிட்ட பதினாறுவகையான அபிஷேகங்களும் நடைபெற்றது. பட்டுநூல் மாலை சாற்றுதல் வைபவம் (திருபவுத்திரம்) பெளா்ணமிநாளில் நடைபெறவுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை தக்காா் வெங்கடாசலம், துணை ஆணையா் ராமசாமி மற்றும் கள்ளழகா்கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT