மதுரை

பேரையூரில் திட்டப்பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

DIN

பேரையூா் பகுதியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் வளம் மீட்பு பூங்காவில் தரம் பிரித்து வாங்கப்பட்ட மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்துப் போடுவதற்காக தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல பேரையூா் பேருந்து நிலையத்தில் இடைவெளி மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது செயல் அலுவலா் ஜெயதாரா உள்ளிட்ட அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT