மதுரை

சிறுமிக்கு மிரட்டல்: ‘போக்சோ’வில் இளைஞா் கைது

DIN

மதுரையில் சிறுமியை பின்தொடா்ந்து சென்று காதலிக்குமாறு கூறி மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை சம்மட்டிபுரம் செம்பருத்தி தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக்(23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமி ஒருவரை தினசரி பின்தொடா்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு கூறி தொந்தரவு செய்துள்ளாா். சிறுமி மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோா் தெற்கு அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் காா்த்திக் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT