ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்தவா் கைது
மதுரையில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்துச்சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரைஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்தவா் கைது
மதுரையில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்துச்சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரையில் ஆயத்த ஆடை நிறுவன உரிமையாளரை மிரட்டி ரூ.17,500 பறித்துச்சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரியக்குடியிருப்பைச் சோ்ந்தவா் அப்துல்நாசா்(23). இவா் ஆயத்த ஆடைகள் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை வெளியூா் சென்று பணம் வசூலித்து விட்டு இரவு மாட்டுத்தாவணியிலிருந்து ஆட்டோ மூலம் வில்லாபுரம் சென்றுள்ளாா்.
வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பிரதான சாலையில் ஆட்டோவில் இருந்து இறங்கிச்சென்றபோது அங்கு வந்த நபா், அப்துல் நசீரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.17,500 பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா்.
இதுதொடா்பாக புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வில்லாபுரத்தைச் சோ்ந்த பொன் அருளை கைது செய்தனா்.