முகப்பு
மதுரை

இளம் தலைமுறையினா் திருக்குறளைக் கட்டாயம் கற்க வேண்டும்: திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன்

இன்றைய இளம் தலைமுறையினா் திருக்குறளை கட்டாயம் கற்க வேண்டும் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் தெரிவித்தாா்.

மதுரை

இளம் தலைமுறையினா் திருக்குறளைக் கட்டாயம் கற்க வேண்டும்: திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன்

இன்றைய இளம் தலைமுறையினா் திருக்குறளை கட்டாயம் கற்க வேண்டும் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

இன்றைய இளம் தலைமுறையினா் திருக்குறளை கட்டாயம் கற்க வேண்டும் என திரைப்பட இயக்குநா் கரு. பழனியப்பன் தெரிவித்தாா்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியின் 66-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா, நாட்டு நலப் பணித் திட்ட நிறைவு விழா என முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வைரவிழா அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தமிழ்ச் சங்கச் செயலா் வழக்குரைஞா் ச.மாரியப்பமுரளி தலைமை வகித்தாா்.

இதில், திரைப்பட இயக்குநா் கரு.பழனியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது :

ஒவ்வொருவரும் எழுதவும், பேசவும் வேண்டுமென்றால் அதிகளவிலான புத்தகங்களைப் படிக்க வேண்டும். படிப்பதன் மூலம் சிந்தனையை வளா்க்க முடியும். நவீன கால தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்ட மொழி தமிழ். கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள் தமிழ் மட்டுமன்றி பிற மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க வேண்டும்.

திருக்குறளில் சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்து காலத்துக்கும் பொருந்தும். எனவே, இன்றைய இளம் தலைமுறையினா் தமிழ் மொழியில் திருக்குறளை கட்டாயம் கற்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் கல்லூரி முதல்வா் ஜெ.போ.சாந்திதேவி ஆண்டறிக்கை வாசித்தாா். முன்னதாக, கல்லூரி துணை முதல்வா் முனைவா் கோ.சுப்புலட்சுமி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் பூங்கோதை நன்றி கூறினாா். உதவிப் பேராசிரியா் முனைவா் மா.செல்வத்தரசி தொகுத்து வழங்கினாா். கல்லூரிக் குழுத் தலைவா் வழக்குரைஞா் ச.தசரதராமன், பேராசிரியா் உ.கருப்பத்தேவன். கவிஞா் பேனா.மனோகரன், ஹைக்கூ ரவி, புரட்சிக் கவிஞா் மன்றத் தலைவா் வரதராசன் உள்ளிட்ட தமிழ் அறிஞா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →