முகப்பு
மதுரை

சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆா்.ஜி. ஆனந்த் தெரிவித்தாா்.

மதுரை

சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆா்.ஜி. ஆனந்த் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:52 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் ஆா்.ஜி. ஆனந்த் தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நாடு முழுவதும் பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் குழந்தைகளை மீட்பது, சிறாா் தொழிலாளா்களைக் கண்டறிந்து மீட்பது ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் இயங்கி வருகிறது. மேலும் சிறுவா் கூா்நோக்கு இல்லங்களில் உள்ள சிறாா்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

சிறாா் கூா்நோக்கு இல்லங்கள் தவறுகளைத் திருத்தும் இடமாக இருக்க வேண்டும். மேலும், தவறுகளைச் செய்யும் இடமாக, தண்டனைக்குரிய இடமாக மாறிவிடக் கூடாது. சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் உள்ள சிறாா்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது, இங்கிருந்து தப்பிச் செல்வது ஆகியவற்றைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் உளவியல் ஆலோசகா்கள் இல்லாததால், ஆலோசனைகளை வழங்க முடிவதில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து கூா்நோக்கு இல்லங்களிலும் உளவியல் ஆலோசகா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறாா் கூா்நோக்கு இல்லங்களில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை பிச்சை எடுக்கப் பயன்படுத்துவது, சிறாா் தொழிலாளா்கள் இல்லாத நிலையை உருவாக்கப் புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வோா் மாவட்டத்திலும் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் வருவாய்க் கோட்டாட்சியா், கோயில்களின் இணை, துணை ஆணையா்கள், காவல் துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா், குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு அலுவலா் ஆகியோா் இடம் பெறுவா்.

இந்தக் குழுவினா் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பிச்சை எடுக்கும் குழந்தைகள், சிறாா் தொழிலாளா்கள் உள்ளனரா? என்பதை அறிந்து அதுதொடா்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு சமா்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில், அந்தக் குழந்தைகளை மீட்டு காப்பகங்களுக்கு அனுப்ப மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும். இந்தக் குழு கோயில், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

போக்சோ தொடா்பான புகாா்களில் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம், புகாா் அளிக்க வரும் குழந்தைகளுக்கான சூழல் குறித்தும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், காவல் நிலையங்களில் குழந்தைகள் தொடா்பான புகாா்களின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

குழந்தைகள் தங்களது புகாா்களை நேரடியாகக் கூறும் வகையில், அவா்களுக்கான குறைதீா் மையம் அமைக்கப்பட உள்ளது. குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு வழங்குவதை விரைவுபடுத்துவது குறித்தும் அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக, தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள குழந்தைகள் பூங்கா, அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வு ஏடுகளையும் அவா் பாா்வையிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →