தப்பியோட முயன்ற ரெளடியின் கால்களில் எலும்பு முறிவு
மதுரையில் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்று, வைகையாற்றில் குதித்த ரெளடியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரையில் போலீஸாரிடமிருந்து தப்பியோட முயன்று, வைகையாற்றில் குதித்த ரெளடியின் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை புதுநத்தம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடா்பாக தேடப்பட்டு வந்த தமிழ்ச்செல்வன் என்ற அஜீத்குமாா் விரகனூா் பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தல்லாகுளம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட தனிப் படையினா் வியாழக்கிழமை இரவு அங்கு சென்று அவரைக் கைது செய்தனா்.
விசாரணையில் அவா் விரகனூா் வைகை ஆற்றின் உள்ளே முள் புதரில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கு அவரை போலீஸாா் அழைத்துச் சென்று மூன்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனா்.
அப்போது, போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய தமிழ்ச்செல்வன் வைகை ஆற்றுக்குள் குதித்ததில், அவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்த்தனா்.
கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பட்டத்தக்கது.