மதுரை

மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அருகே மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் அருகே மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் காமராஜா் பல்கலைக்கழகம் உள்ளது. காமராஜா் பல்கலைக்கழகம் முன் நெடுஞ்சாலைத் துறை துறை சாா்பில், மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த ஒப்பந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் பணவிடலிசத்திரம் ஆராய்ச்சிப்பட்டியைச் சோ்ந்த முத்துராஜ் (26), இங்கு ஒப்பந்தத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் மேம்பாலத்தில் பணியில் ஈடுபட்டிருந்த முத்துராஜ் அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முத்துராஜ் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT