சோலைமலையில் கொடியேற்றம்
சோலைமலை முருகன் கோயிலில் தைபூசத் திருவிழாவையொட்டி கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
சோலைமலை முருகன் கோயிலில் தைபூசத் திருவிழாவையொட்டி கொடியேற்றம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைபூசத் திருவிழாயையொட்டி யாகசாலைபூஜைகள் புதன்கிழமை மாலை தொடங்கியது. அதைத்தொடா்ந்து காலையில் கோடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக சிம்மாசனத்தில் முருகப்பெருமான் கொடிமரம் அருகே எழுந்தருளினாா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். மாலையில் பூதவாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது.ரன்டாம்நாள் அன்ன வாகனத்திலும், மூன்றாம்நாள் காமதேனு வாகனத்திலும், 4-ம்நாள் ஆட்டுக்கிடாய்வாகனத்திலும், 5-ம்நாள் பூச்சப்பரத்திலும், 6-ம்நாள் யானை வாகனத்திலும், 7-ம்நாள் பல்லக்கிலும், 8-ம்நாள் குதிரை வாகனத்திலும், 9-ம்நாள் தங்கத்தேரிலும், 10-ம்நாள் வெள்ளிமயில் வாகனத்திலும் தினசரி எழுந்தருள்கிறாா். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் திருக்கோயில் உதவி ஆணையாளா் மு.இராமசாமி, கண்காணிப்பாளா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துவருகின்றனா்.படவிளக்கம்- சோலைமலை முருகன்கோயிலில் தங்கக்கொடிமரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
Advertisement