மதுரை

பெண்கள் விடுதிக்குள் நுழைந்து கைப்பேசிகளைத் திருடியவா் கைது

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் நுழைந்து 3 கைப்பேசிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை செனாய் நகா் ஜெகஜீவன்ராம் தெருவில் தனியாா் பெண்கள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பணிக்குச் செல்லும் பெண்கள், கல்லூரி செல்லும் மாணவிகள் தங்கியுள்ளனா்.

இந்த நிலையில், விடுதியில் பெண்கள் வைத்திருந்த 3 கைப்பேசிகளை அடையாளம் நபா் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், மதிச்சியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மதுரை காமராஜா்புரம் கக்கன் தெருவைச் சோ்ந்த மணிகண்டனை (26) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 3 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT