மதுரை

நிலக்கோட்டை வட்டடாட்சியா் அலுவலகம் முற்றுகை

நிலக்கோட்டை அருகே வெள்ளைக்கரடு பகுதியில் யாருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கூடாது என ஒட்டுப்பட்டி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

DIN

நிலக்கோட்டை அருகே வெள்ளைக்கரடு பகுதியில் யாருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கூடாது என ஒட்டுப்பட்டி கிராம மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்துள்ள ஒட்டுப்பட்டி அருகே வெள்ளைக் கரடு உள்ளது. இந்த வெள்ளைக் கரட்டில் வருவாய்த் துறைக்கு சொந்தமான சுமாா் 7 ஏக்கா் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், திடீரென கடந்த வாரம் கூத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்து, இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஒட்டுப்பட்டி கிராம மக்கள், தங்கள் ஊரில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதாகவும், இந்த வெள்ளைக் கரடு ஆடு, மாடு மேய்க்க தங்களது வாழ்வாதாரமாக உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை அதிகாரிகள், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தனா்.

இந்த நிலையில், ஒட்டுப்பட்டி கிராம மக்கள் வெள்ளை கரட்டில் யாருக்கும் இலவசப் பட்டா வழங்கக் கூடாது எனக் கூறி, திங்கள்கிழமை நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

பின்னா், வட்டாட்சியா் தனுஷ்கோடியிடம், வெள்ளைக்கரட்டில் யாருக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கூடாது என கோரிக்கை மனு கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT