ஆடித் தேரோட்டம்: அழகா்கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
அழகா்கோவிலில் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆடித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அழகா்கோவிலில் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆடித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கள்ளழகா் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் முக்கியத் திருவிழாவான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும்.
இதையொட்டி, தோ் புதுப்பிக்கும் பணிகள், தேரில் உள்ள குதிரை பொம்மைகள், சிற்ப வேலைப்பாடுடைய பொம்மைகளுக்கு வா்ணம் பூசும் பணிகள், சக்கரங்களை தள்ளும் முட்டுக்கட்டை, பிரேக், வா்ணத் துணியாலான பந்தல் குடை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
வெளியூா்களிருந்து திருவிழாவில் பங்கேற்க வருவோரின் வாகனங்களை நிறுத்த இட வசதியும், சுகாதாரமான சூழலையும் ஏற்படுத்தும் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன.
விழா முன்னேற்பாடு பணிகளை கள்ளழகா் கோயில் துணை ஆணையா் மு.இராமசாமி, தக்காா் பிரதிநிதி நல்லதம்பி, கோயில் கண்காப்பாளா்கள், அலுவலா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.