முகப்பு
மதுரை

காந்தி அருங்காட்சியகத்தில் கலைத்திறன் பயிற்சிமே 15-இல் தொடக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் பயிற்சி வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.

மதுரை

காந்தி அருங்காட்சியகத்தில் கலைத்திறன் பயிற்சிமே 15-இல் தொடக்கம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் பயிற்சி வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திறன் பயிற்சி வருகிற 15-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மீ. மருதுபாண்டியன் ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

34- ஆவது ஆண்டு கோடை கால கலைத்திறன் பயிற்சி முகாம் வருகிற 15-ஆம் தேதி முதல் வருகிற 27-ஆம் தேதி வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் ஓவியம், குரலிசை, யோகாசனம், கராத்தே, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, ஹிந்தி பேச்சுப் பயிற்சி, நாட்டுப்புறக் கலைகள், தமிழ்ப் பயிற்சி, சிலம்பம் ஆகிய பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் காந்தி நினைவு அருங்காட்சியக அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு 0452- 2522822 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →