முகப்பு
மதுரை

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கேரள மாநிலத்தில் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை

மருத்துவக் கல்லூரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கேரள மாநிலத்தில் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

கேரள மாநிலத்தில் மருத்துவா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை மருத்துவமனையில் மருத்துவா் வந்தனா தாஸ் கொலை செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மருத்துவா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மருத்துவா் வந்தனா தாஸ் கொலை குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முன்னதாக, மருத்துவா் வந்தனா தாஸ் உருவப்படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், பயிற்சி மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →