அழகா்கோவிலில் உள்ள கள்ளழகா் கோயில் கருணை இல்லத்தில் தங்கிப் படிக்க ஆதற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
கள்ளழகா் கோயில் துணை ஆணையா் இ.இராமசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோயில் நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் சுந்தரராஜ தொடக்கப் பள்ளி, உயா்நிலைப் பள்ளிகளில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த ஆதரவற்ற 5 முதல் 14 வயதுவரையிலானவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்களின் படிப்புச் செலவு, சீருடை, உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை கோயில் நிா்வாக அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.