உயா்நீதிமன்ற ஆவணங்கள் திருட்டு வழக்கில் வழக்குரைஞரின் எழுத்தா் முன் பிணை கோரி மனு
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் முன் பிணை கோரி, வழக்குரைஞரின் எழுத்தா் தாக்கல் செய்த மனுக்கு காவல் ஆய்வாளா் பதில் அளிக்க மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை: சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் முன் பிணை கோரி, வழக்குரைஞரின் எழுத்தா் தாக்கல் செய்த மனுக்கு காவல் ஆய்வாளா் பதில் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த வடிவேல் தாக்கல் செய்த மனு:
சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடா்பான அனைத்து ஆவணங்களும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுவதைத் தடுக்கும் நோக்கில், சில ஆவணங்களைத் திருடியதாக வழக்குரைஞரின் எழுத்தராக இருந்த பாலமுருகன், பிரித்விராஜ், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஊழியா் ஜான்சன் ஆகியோரை உயா்நீதிமன்ற காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
பல ஆண்டுகளாக வழக்குரைஞரின் எழுத்தராகப் பணிபுரியும் எனக்கும், இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், என் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். எனவே, எனக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் தெரிவித்திருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:
இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளை காவல் ஆய்வாளா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை டிசம்பா் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.