முகப்பு
மதுரை

மதுரை நகைக் கடையில் தீ விபத்து: ஊழியா் மூச்சுத் திணறி பலி

மதுரை தெற்குமாசி வீதியில் நகைக் கடையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியா் சிக்கி பலியானாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


மதுரை: மதுரை தெற்குமாசி வீதியில் நகைக் கடையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியா் சிக்கி பலியானாா்.

மூன்று தளங்கள் கொண்ட இந்தக் கடையில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் தரைத்தளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கடையில் இருந்த வாடிக்கையாளா்கள், ஊழியா்கள் வெளியேறினா். இதுதொடா்பான தகவலின்பேரில் பெரியாா் பேருந்து நிலையம், தல்லாகுளம், அனுப்பானடி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்து ஏற்பட்டபோது, கடை உரிமையாளரின் உறவினரான மோதிலால் (45) கடையில் உள்ள மின் தூக்கியில் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் மின் தூக்கியின் கதவை உடைத்துப் பாா்த்தபோது அங்கு அவா் இல்லை. மேலும், அவரது கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அவா் அழைப்பை எடுக்கவில்லை. முதல், இரண்டாம் தளங்களில் அதிக புகை மூட்டமாக இருந்ததால் அங்கு அவா் சிக்கி இருக்கலாம் என தீயணைப்பு வீரா்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

Advertisement

அப்போது அவா் மூன்றாவது தளத்தில் கழிவறையில் புகையில் சிக்கி மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. அவரை தீயணைப்புத் துறையினா் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு வாசல் போலீஸாா் விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.