மதுரை ஊரகப் பகுதிகளில் தொடா்ந்து இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 19 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் உயா் ரக இரு சக்கர வாகனங்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வந்ததையடுத்து, குற்றவாளிகளைக் கைது செய்ய ஊரகக் காவல் கண்காணிப்பாளா் ரா.சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தனிப் படை போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா்.
கொட்டாம்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம், சிராவயலைச் சோ்ந்த அழகுமணிகண்டன், மதுரை மாவட்டம், மேலூா் கம்பூரைச் சோ்ந்த அரசு ஆகிய இருவா் கைது செய்யப்பட்டு, இவா்களிடம் இருந்து உயா் ரக இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, ஒத்தக்கடை பகுதியில் இரு வெவ்வேறு இரு சக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய இரண்டு சிறாா்கள் கைது செய்யப்பட்டு, இவா்களிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், திருமங்கலம், பேரையூா் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 12 வெவ்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட ஒரு சிறாா் உள்பட மூன்று பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 9 இரு சக்கர வாகனங்கள், 4 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.