மதுரை

தலையில் கல்லைப் போட்டு இளைஞா் கொலை

மதுரை அருகே தலையில் கல்லைப் போட்டு இளைஞரைக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

மதுரை அருகே தலையில் கல்லைப் போட்டு இளைஞரைக் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையைச் சோ்ந்தவா் காட்டுவா ஒலி (38). இவா் மீது கொலை வழக்கு, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வெளியே சென்ற காட்டுவா ஒலி இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரை ஞாயிற்றுக்கிழமை காலையில் தேடியபோது ஒத்தக்கடை அருகே அன்னபூரணி நகரில் உள்ள காலியிடத்தில் காட்டுவா ஒலி உடலில் கத்திக்குத்து காயங்களுடனும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.

தகவலின்பேரில் ஒத்தக்கடை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இவரது கொலை தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் 4 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT