மதுரை

காளை முட்டியதில் பெண் பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் வளா்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

DIN


மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டில் வளா்த்த ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நடுமுதலைக்குளத்தைச் சோ்ந்த ராஜாவின் மனைவி ஜெயமணி (65). இவா்கள் தங்களது தோட்டத்தில் ஜல்லிக்கட்டு காளை வளா்த்து வந்தனா்.

இந்த நிலையில் ஜெயமணி, தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைக்கு ஞாயிற்றுக்கிழமை தீவனம் வைக்கச் சென்றாா். அப்போது காளை முட்டியதில் வயிற்றுப் பகுதியில் காயமடைந்த ஜெயமணியை குடும்பத்தினா் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT