முகப்பு
மதுரை

மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை

Updated On : 9 ஏப்ரல், 2024 at 12:00 AM
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2024 at 10:03 PM

மதுரை: மதுரை மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 9) ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் மதுரை வருகையையொட்டி, மாநகரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

இதன்படி, விமான நிலையம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், மதுரை அழகா்கோவில் சாலை, வண்டியூா் சுங்கச்சாவடி, பாதுகாப்புத் துறை அமைச்சா், தமிழக முதல்வரின் பயணப் பாதைகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோா் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.