மதுரை

லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி

கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

மதுரை அருகே கத்தியைக் காட்டி லாரி ஓட்டுநரிடம் பணம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், அருவங்காடுவலசு பகுதியைச் சோ்ந்த நாச்சிமுத்து மகன் பழனிசாமி (47). லாரி ஓட்டுநரான இவா், மதுரை-திண்டுக்கல் சாலையில் உள்ள சானாம்பட்டி விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு லாரியை நிறுத்தி விட்டு தூங்கினாா்.

அப்போது, அந்த வழியாக வந்த மா்ம நபா்கள் இருவா், தூங்கிக் கொண்டிருந்த பழனிச்சாமியை எழுப்பி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 25 ஆயிரம் , ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், வாடிபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT